உச்சி ஏறிக் கொண்டிருந்தான் - சூரியன்
உப்புக் காற்று வேண்டுமென்றது - நுரையீரல்
தண்ணீரில் நனையும் ஆசை வந்தது - கால்களுக்கு
உடனே ஏறினேன் தண்டவாள வண்டியில் . . .
இழவு வீட்டின் இரண்டாம் நாள் சூழல் - பெட்டியில்
என்னோடு சேர்ந்து மொத்தம் மூன்று பேர் .
கதர் ஆடையில், கடந்து செல்லும் இடங்களை,
கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே - ஒரு பெரியவர்
அரைக்கால் டவுசரும், உடல் அப்பிய பனியனுமாய்
தனியாய் பேசியபடி - ஒரு அல்ட்ரா மாடர்ன் யுவன்
அழுது கொண்டிருந்த காற்றாடியிடம், அமைதியாய்
துக்கம் விசாரித்துக் கொண்டு - நான்
மௌனமாய் கடந்தன நொடிகள் . . .
இறங்கும் இடம் வந்தது - இறங்கினேன்.
எனைத் தொடர்ந்து - அவர்களும்
மீண்டும்,
பதினைந்து நிமிட பஸ் பயணம்
பஸ்ஸில் அவர்களோடு - நான்
வெவ்வேறு இடங்களிலிருந்து தொடங்கிய மூவரின்
பயணம் இப்போது ஒன்றாய் . . .
எங்கே இறங்கப் போகிறார்கள் ? தெரிந்து கொள்ளும்
ஆர்வம் என்னிடம் . . .
ஒவ்வொரு நிறுத்ததிலும், இறங்குவார்களா ?
என்று பார்த்துக் கொண்டே வந்தேன்.
நான் இறங்கும் இடம் வந்தது . . .
இறங்கித் திரும்பிப் பார்த்தால்,
இருவரும் நின்று கொண்டிருந்தனர் .
எங்களின் முன்னால் பரந்து விரிந்திருந்தது - கடற்க்கரை
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம் . . .
. . . . . .
வெவ்வேறு திசைகளில் நடக்க ஆரம்பித்தோம் . . .
சற்று தூரம் நடந்த பின் ஏனோ அவர்களைத்
திரும்பிப் பார்க்கத் தோன்றியது . . .
இருவரும் கடல் நோக்கி நடந்து கொண்டிருந்தனர் - அவரவர் பாதையில்
கண்களை மூடி காற்றை உள்ளிழுத்தபடி நடக்க ஆரம்பிதேன் . . .
வண்டிக் கடைகள் இழுத்துப் போர்த்தியபடி உறங்கிக் கொண்டிருக்க,
அதனடியில் ஒரு பெண் தனியாக முதுகு காட்டிக் கொண்டிருந்தாள் . . .
அவளைக் கடக்கும் போது . . . தப்புத்தப்பு . . .
அவள் . . . அல்ல . . . அவர்கள்
அவள் மடிகளுக்கிடையே முகம் புதைத்தபடி - அவன்
அவன் தலை கோதியபடி - அவள்
சிதறிய புத்தகங்கள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது . . .
மல வாடை வீசியது அவ்விடத்தில் . . .
கண், காது பொத்தி
அவ்விடத்தை விட்டு வேகமாய் விலகி நடந்தேன் . . .
விலகி - விழித்து
உற்று நோக்கினால் . . .
. . . . . . . . . . . . . .
அங்கிங்கெங்கிலும் மல வாடை . . . .
தூரத்தில் . . . அந்த அல்ட்ரா மாடர்ன் இளைஞன்
நிர்வாணமாய் ஓடிக் கொண்டிருந்தான் . . .
வெகு அருகில் . . . குமட்டல் சத்தம்
கதர் ஆடைப் பெரியவர் - வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார் . . .
பாவம் . . . ஒவ்வாமை . . .
திரும்பி நடந்தேன் . . . .
நடுரோட்டில் புணர்வதர்க்கு
நாம் ஒன்றும் நாய்கள் அல்ல . . .
நாளைய தினசரிகளில் விளம்பரப்படுத்த வேண்டும்,
மெரீனாவில் நாய்பிடிக்க ஆட்கள் தேவை என்று . . .
பிறர்பாரா முகம் ...
இவன்.. கோபி
Monday, March 14, 2011
அகம் ... புறம் ... ரணம் (2.5D)
வெயிலை நலம் விசாரித்துக் கொண்டிருந்தன
என் வேர்வைத் துளிகள் ...
எரியும் தீயில்
எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தது
பிளாட்பார மின்விசிறி ...
இரயிலை எதிர்பார்த்து - சிலர்
கிழக்கு பார்த்துக் கொண்டிருந்தனர் ...
" அப்பப்பா ... என்ன வெயில் ?
மழை பேஞ்சா பரவால்ல ... " - கைக்குட்டையில்
முகம் துடைத்தபடி பேசிக்கொண்டிருந்தார் - பெரியவர்
. . . . . . . . .
மழை !?..
மனம் ஏங்கத் தொடங்கியது ...
அம்மாவுக்குமாய் சேர்த்து ...
. . . . . . . . .
காபி ஸ்டாலில் சொட்டிக்கொண்டிருந்த குடிநீர்
குழாயில் கை நனைத்து விளையாடிக்
கொண்டிருந்தது - குழந்தை
. . . . . . . . .
அம்மாவின் ஞாபகக் கசிவுகள் ,
என் உணர்வுகளோடு விளையாட ஆரம்பித்தன
அந்தக் குழந்தையைப் போல ...
வானலியில் வறுபடும் வெங்காயமாய் வெந்து
புழுங்க ஆரம்பித்தது - மனம்
. . . . . . . . .
தூரத்தில், வெயிலுக்கு குடை பிடித்தபடி
நடந்து வந்து கொண்டிருந்தார் - ஒரு பெண்
. . . . . . . . .
வெப்பம் குறைந்து, குளிர் காற்று வீச ஆரம்பித்தது ...
. . . . . . . . .
கை நனைத்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை
ஓடிச் சென்று தாவியது - அந்த குடை பெண்ணிடம் ...
"ஏய் .. நில்லு .." - கத்தினார் குழந்தையோடு இருந்தவர்
. . . . . . . . .
வானம் கிழித்து மண்ணில் இறங்கியது மின்னல்
வலியில் கதறித் துடித்தது - வானம் ...
ஆரவாரம்மாய் ஆரம்பித்தது - மழை
. . . . . . . . .
குழந்தைக்குமாய் சேர்த்து குடை பிடித்தபடி
ஓடி வந்தார் - அப்பெண்
. . . . . . . . .
மழையில் குளித்தபடி வந்து கொண்டிருந்தது - இரயில்
. . . . . . . . .
குடைப் பெண்ணிடம் குழந்தையை வாங்கியவர்
" அப்படியே அம்மா போல இருக்கீங்களா ...
அதான் .." என்றார்
அப்பெண் குழந்தையின் தலை வருடியபடி விலக
குழந்தை கைநீட்டி அழ ஆரம்பித்தது ...
. . . . . . . . .
நான் - என் கண்ணீர் துளி மறைக்க
மழையில் நனைய ஆரம்பிதேன் ...
. . . . . . . . .
இரயில் நின்றது ,
குடைபெண் - பெண்களின் பெட்டியில் ஏறினார் ...
. . . . . . . . .
மழை முரட்டுத்தனமாய் பெய்யத் தொடங்கியது
உள்ளும் ... புறமும் ...
. . . . . . . . .
சாலைகளில் - வழியடைத்து
தேங்க ஆரம்பித்தது மழை வெள்ளம் ...
. . . . . . . . .
சற்று முன், மழை விரும்பிய அப்பெரியவர்
மழை வெறுத்து விலகி நின்றார் ...
. . . . . . . . .
திரும்பிப் பார்த்தேன் ,
இரயில் மேற்க்கோடிக் கொண்டிருந்ததது ...
. . . . . . . . .
. . . . . . . . .
நனைந்தபடி நடக்க ஆரம்பிதேன் - டெலிபோன் பூத் நோக்கி ..
. . . . . . . . .
பாக்கெட்டில் இருந்த ஒத்த பத்து ரூபாய் நோட்டை
தடவியபடி, டயல் செய்து காத்திருந்தேன் .......
. . . . . . . . அம்மாவிடம் தலை துவட்டிக் கொள்ள . . . . . . . .
என் வேர்வைத் துளிகள் ...
எரியும் தீயில்
எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தது
பிளாட்பார மின்விசிறி ...
இரயிலை எதிர்பார்த்து - சிலர்
கிழக்கு பார்த்துக் கொண்டிருந்தனர் ...
" அப்பப்பா ... என்ன வெயில் ?
மழை பேஞ்சா பரவால்ல ... " - கைக்குட்டையில்
முகம் துடைத்தபடி பேசிக்கொண்டிருந்தார் - பெரியவர்
. . . . . . . . .
மழை !?..
மனம் ஏங்கத் தொடங்கியது ...
அம்மாவுக்குமாய் சேர்த்து ...
. . . . . . . . .
காபி ஸ்டாலில் சொட்டிக்கொண்டிருந்த குடிநீர்
குழாயில் கை நனைத்து விளையாடிக்
கொண்டிருந்தது - குழந்தை
. . . . . . . . .
அம்மாவின் ஞாபகக் கசிவுகள் ,
என் உணர்வுகளோடு விளையாட ஆரம்பித்தன
அந்தக் குழந்தையைப் போல ...
வானலியில் வறுபடும் வெங்காயமாய் வெந்து
புழுங்க ஆரம்பித்தது - மனம்
. . . . . . . . .
தூரத்தில், வெயிலுக்கு குடை பிடித்தபடி
நடந்து வந்து கொண்டிருந்தார் - ஒரு பெண்
. . . . . . . . .
வெப்பம் குறைந்து, குளிர் காற்று வீச ஆரம்பித்தது ...
. . . . . . . . .
கை நனைத்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை
ஓடிச் சென்று தாவியது - அந்த குடை பெண்ணிடம் ...
"ஏய் .. நில்லு .." - கத்தினார் குழந்தையோடு இருந்தவர்
. . . . . . . . .
வானம் கிழித்து மண்ணில் இறங்கியது மின்னல்
வலியில் கதறித் துடித்தது - வானம் ...
ஆரவாரம்மாய் ஆரம்பித்தது - மழை
. . . . . . . . .
குழந்தைக்குமாய் சேர்த்து குடை பிடித்தபடி
ஓடி வந்தார் - அப்பெண்
. . . . . . . . .
மழையில் குளித்தபடி வந்து கொண்டிருந்தது - இரயில்
. . . . . . . . .
குடைப் பெண்ணிடம் குழந்தையை வாங்கியவர்
" அப்படியே அம்மா போல இருக்கீங்களா ...
அதான் .." என்றார்
அப்பெண் குழந்தையின் தலை வருடியபடி விலக
குழந்தை கைநீட்டி அழ ஆரம்பித்தது ...
. . . . . . . . .
நான் - என் கண்ணீர் துளி மறைக்க
மழையில் நனைய ஆரம்பிதேன் ...
. . . . . . . . .
இரயில் நின்றது ,
குடைபெண் - பெண்களின் பெட்டியில் ஏறினார் ...
. . . . . . . . .
மழை முரட்டுத்தனமாய் பெய்யத் தொடங்கியது
உள்ளும் ... புறமும் ...
. . . . . . . . .
சாலைகளில் - வழியடைத்து
தேங்க ஆரம்பித்தது மழை வெள்ளம் ...
. . . . . . . . .
சற்று முன், மழை விரும்பிய அப்பெரியவர்
மழை வெறுத்து விலகி நின்றார் ...
. . . . . . . . .
திரும்பிப் பார்த்தேன் ,
இரயில் மேற்க்கோடிக் கொண்டிருந்ததது ...
. . . . . . . . .
. . . . . . . . .
நனைந்தபடி நடக்க ஆரம்பிதேன் - டெலிபோன் பூத் நோக்கி ..
. . . . . . . . .
பாக்கெட்டில் இருந்த ஒத்த பத்து ரூபாய் நோட்டை
தடவியபடி, டயல் செய்து காத்திருந்தேன் .......
. . . . . . . . அம்மாவிடம் தலை துவட்டிக் கொள்ள . . . . . . . .
Subscribe to:
Posts (Atom)